Sunday 13 March 2011

அஜித்திடம் சரண்டர் ஆன அஞ்சலி!


அஜித்திடம் நான் சரண்டர் ஆயிட்டேன்; அவர தூரத்தில் நின்று ரசிச்சவங்க பக்கத்துல போய் பார்த்தால் சரண்டர் ஆயிடுவாங்க... என்று நடிகை அஞ்சலி கூறியிருக்கிறார். டைரக்டர் வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜித், த்ரிஷா நடித்து வரும் படம் மங்காத்தா. காமடி, காதல், ஆக்ஷன் என ஆம்பூர் பிரியாணி போல தயாராகிக்கொண்டிருக்கும் (சூட்டிங் ஸ்பாட்டில் தல அவ்வப்போது ப்ரியாணி சமைச்சி பரிமாறுராறுல்ல...) இந்த படத்தின் நடிகை அஞ்சலியும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். முக்கிய கேரக்டர் என்ற தகவலைத் தவிர வேறெந்த தகவலும் இதுவரை கசியவில்லை. அஞ்சலியிடம் பேச்சு கொடுத்தால்கூட, மங்காத்தா பற்றி வாய் திறக்க மறுக்கிறார்.
மங்காத்தா பற்றிய கேள்விக்கு பதில் அளித்துள்ள அஞ்சலி, மங்காத்தா படம் பற்றி ஒரு பிட் கூட வெளியில சொல்லக்கூடாதுன்னு வெங்கட்பிரபு சார் சொல்லியிருக்கார். அஜீத் சார் கூட நடிக்கறதே பெரிய பாக்கியம். என்னை மாதிரி தூரத்தில் நின்று அவரை ரசித்தவர்கள் பக்கத்திலே போய் பார்த்தால் சரண்டர் ஆகிவிடுவார்கள். அந்தளவுக்கு கைன்டான மனுஷன். நானும் அவரிடம் சரண்டர் ஆயிட்டேன். படம் பெரிய பட்ஜெட்ல உருவாகிகிட்டு இருக்கு. அவ்வளவு பெரிய படத்தில் நானும் இருக்கேங்கறதுதான் பெரிய பெரிய சந்தோஷம், என்று கூறினார். (மங்காத்தா பற்றி கேட்டால்... அஜித்தைப் பற்றி சொல்லுறீங்களே அம்மணி!) 

No comments:

Post a Comment